குருகுலக் கல்வியை முடித்துவிட்டு,ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் துவக்கினர்.ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார்;திருமணம் முடிந்து இல்லறதர்மத்தில் ஈடுபட்டார்.மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார்;தேச சஞ்சாரம் செய்தார்;காலச் சக்கரம் உருண்டோடியது;பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி ஊர்க்கோவிலில் தங்கி,தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.
கடமையைக் கண்ணாகக்கருதிய இல்லறத்தார் விவசாயப்பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன்,துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் சகதர்மபத்தினியைப் பணித்தார்.அறுசுவை உண்டி சமைத்து துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப்போனாள்.காரணம
பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல்என்று ஒரு உபாயத்தைச் சொன்னார் இல்லறத்தார்.என்னே ஆச்சரியம்!!! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல,ஆறு வழிவிட்டது.அக்கரை சென்றடைந்தாள்.
தன் கணவரின் செய்தியைக்கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள்.ரசித்து,ருசித்
உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற,அப்படியே செய்தாள்.ஆஹா, ஆறு வழிவிட,இக்கரை சேர்ந்தாள்.இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா குழம்பிய அவள் தன் கணவரிடமே வினவினாள்.புன்முறுவலுடன் கணவர் பதிலுரைத்தார்.
காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல்,வம்சவிருத்திக்கா
இந்த இல்லறத்தான் தினமும் வழிபட்டு வந்தது ஸ்ரீகால பைரவரையே! எனவே தான் இவர் இல்லறத்தானாக இருந்தும் காமத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடிந்திருக்கிறது.தினமும் ஸ்ரீகால பைரவரை வழிபடுபவர்கள் பைரவ உபாசகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment